Reporter
டிஷ்யூம் டிஸ்யூம்: அருந்ததியர் என்றால் மலம் அள்ளுபவர்களா?
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வதில், தி.மு.க எம்.பி ஆ.ராசாவை மிஞ்சும் ஒருவர் அக்கட்சியில் கிடையாது எனலாம். தி.மு.க தலைமையை சங்கடத்தில் ஆழ்த்துவதால்தான், சில காலம் அவரது வாய்க்கு பூட்டு போடப்பட்டிருந்தது. ஆனால், `தன்னால் அப்படி அமைதியாக இருக்க முடியாது' என்பதை திருச்சி கூட்டத்தில் உணர்த்திவிட்டார்.