இதற்காக மன்ஹாட்டன் நீதிமன்றத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்துள்ளனர். இதுவரை அமெரிக்க அதிபராக இருந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது இல்லை. ட்ரம்ப் மீது முதல் குற்ற வழக்கு இதுவாகும். சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களிடம் ‘தன்னை கைது செய்வதாகக் கூறுவதற்கு’எதிர்ப்புத் தெரிவிக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார். போராட்டங்களுக்கான தனது அழைப்பில், ஆதரவாளர்கள் ஜனவரி 6, 2021 அன்று, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலைப் போன்ற வன்முறையில் ஈடுபடலாம் என்று கவலைகளை டிரம்ப் எழுப்பினார்.