வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து, இணைய தளத்தில் தகவல் தேடிய உளவுத் துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சியோல், வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டில் கிம் ஜாங் உன் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றார் . அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார். அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனையயும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, வடகொரியாவில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில், 'பியூரோ 10' என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமீபத்தில் 'கூகுள்' இணையதளத்தில் அதிபர் கிம் ஜாங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடி இருக்கிறார் . இதனை அறிந்து கொண்ட அதிபர் கிம் ஜாங் அந்த உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மரண தண்டனையை துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.