ஒவ்வொருவருக்கும் ரூ.1.2 கோடி போனஸ்... மலைமலையாக பணக்கட்டுகளை குவித்த நிறுவனம்

சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் மலை மலையாக பணக்கட்டுகளை குவித்து, தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளது. .
கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சமாளிக்க உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மொத்தம் மொத்தமாக பணி நீக்கம் செய்தும் ஊதியத்தை குறைத்தும் வருகின்றன. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் 'ஹெனன் மைன்' என்ற நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் வேளையிலும், ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் இருந்தது. இந்திய ரூபாயில் இது சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி. இதனால் மகிழ்ச்சி பெருக்கில் இருந்த அந்நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க போனஸ் அறிவித்து, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்த போனஸ் நிகழ்ச்சியில், 6 கோடியே 61 மில்லியன் யுவான், இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 கோடியே 81 லட்சம் மதிப்புடைய பணக்கட்டுகளை மலை போல் குவித்து வைத்து, அதில் இருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான், இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடியை போனசாக வழங்கியது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா 1 மில்லியன் யுவான் (சுமார் ரூ.1.20 கோடி) போனசாக வழங்கியது.
இதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை பரிசும் வழங்கியது. நிகழ்ச்சியில் மலைபோல் பணக்கட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், ஊழியர்கள் 2 பேர் கை நிறைய பணக்கட்டுகளை அள்ளி செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

இந்தியாவின் இந்த ஏரியில் இவ்வளவு மர்மங்களா!
