கேரளாவில் PFI தொடர்புடைய 56 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரளாவில் PFI தொடர்புடைய 56 இடங்களில் என்ஐஏ சோதனை
கேரளாவில் PFI தொடர்புடைய 56 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கேரளாவில் PFI தொடர்புடைய 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நாட்டில் தடை செய்யப்பட்ட  இயக்கம். இதில் உள்ள சிலருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில்  சில மாதங்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

இந்நிலையில் கேரளாவில் இன்று காலை முதல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 56 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், ஆலப்புழா, கொல்லம்  எர்ணாகுளம் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com