முக கவசம் அணிவது இனி தனிநபர் விருப்பம்; இங்கிலாந்தில் அதிரடி!

முக கவசம் அணிவது இனி தனிநபர் விருப்பம்; இங்கிலாந்தில் அதிரடி!
முக கவசம் அணிவது இனி தனிநபர் விருப்பம்; இங்கிலாந்தில் அதிரடி!

இங்கிலாந்தில் முக கவசம் அணிவது என்பது இனி தனிநபர் சார்ந்த விருப்பம் என மந்திரி தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. 
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக முக கவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் என மந்திரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய இங்கிலாந்தின் வீட்டு வசதி செயலாளர் ராபர்ட் ஜென்ரிக், "நான் முக கவசம் அணிய விரும்பவில்லை. அதனை பெருமளவிலான மக்களும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.
அதனால், தனிநபர் விருப்பம் சார்ந்த விவகாரத்திற்கு இதனை நாம் கொண்டு செல்ல இருக்கிறோம்" என கூறியுள்ளார். 
மேலும், "மூக தொடர்பு பற்றிய நடப்பில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் வருகிற 19ந்தேதி முதல் நீக்குவது பற்றி இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அரசின் புதிய சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித்தும், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்த விரும்புகிறேன்" என பச்சை கொடி காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com