அமெரிக்காவில் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் குற்றச்சாட்டு

'அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப் மட்டும்தான்' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட

'அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் டிரம்ப் மட்டும்தான்' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாஷிங்டன் சேவைத்துறை ஊழியர்களுக்கான, சர்வதேச கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் காணொலி மூலம் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:  அமெரிக்காவில் இனவெறிபிடித்தவர்கள் பலரும் அதிபராக வேண்டும் என, முயற்சி செய்தனர். ஆனால், அப்படிப்பட்ட யாரும் வெற்றி பெறவில்லை. இனவெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் டிரம்ப் மட்டும்தான். அவர், அமெரிக்காவில் இனவெறியைப் பரப்புகிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com