ஸ்ரீஹரிகோட்டா : இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா : இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா : இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்

இதற்கான 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது

சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. 

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும்  வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. 

அந்த வகையில் இன்று, டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்  பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மூலம் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்கிறது. இதற்கான 22 மணி நேர கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கிவிட்ட நிலையில், இன்று மதியம் 2.19 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆனது சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமானது. சிங்கப்பூர்  நாட்டைச் சேர்ந்த இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனடிப்படையில் தான்  இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்து செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது. 

சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான இந்த டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவிஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com