முன்னணி செய்தி நிறுவனமான பி.பி.சி-க்கு எலான் மஸ்க் அளித்த பேட்டியில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அதன் தற்போதைய நிலவரம் வரை அனைத்தையும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ”டுவிட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று நான் கருதினாலும், கடந்த சில மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன், பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன், சரியான நபரைக் கண்டுபிடித்தால் தனது டுவிட்டர் நிறுவனத்தை விற்பேன் ” என்று கூறியுள்ளார்.