தஞ்சாவூர்: வாங்குவது போல் நடித்து 134 கிராம் தங்க நகைகள் திருட்டு - இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கும்பகோணம் அருகே நகைகள் வாங்குவது போல் நடித்து 134 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை திருடப்பட்ட கடை
நகை திருடப்பட்ட கடை

கும்பகோணத்தில் நகைகள் வாங்குவது போல் நடித்து கடையிலிருந்து 134 கிராம் தங்க நகைகளை திருடிச்சென்ற இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பெரிய கடை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நகைக்கடையில் நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர்.

கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி, ஏமாற்றி கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு, தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவர்கள் நகைகள் திருடி செல்வது தெரியவந்தது.

இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் அழகேசன் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறையினர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரிய கடை தெரு பகுதியில் 134 கிராம் நகைகள் திருடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com