வாணியம்பாடியில் அடுத்தடுத்து 5 வீடுகள் மற்றும் ஒரு கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராஜ்கமல், பர்வீன்தாஜ், அப்துல் மஜீத், ஜலாவுதீன் உள்ளிட்டோர் வீடுகளைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தனர்.
இந்த நிலையில், பூட்டிய வீடுகளை நோட்டுமிட்டு மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து ஐந்து வீடுகள் மற்றும் ஒரு கடையின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
அதன் பேரில், சொந்த ஊர் திரும்பிய வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் அறையில் இருந்த பீரோக்கள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெளியூர் செல்வதை முன்கூட்டிய அறிந்து அவர்களது வீடுகளில் திருடுவதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.