புதுச்சேரியில், ஒட்டப்பயிற்சியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம், சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (26). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2022-ம் ஆண்டு புதுவை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி ஓட்டப் பயிற்சியின் போது விஜய் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காவலர் பயிற்சியில் ஓட்ட பயிற்சியின் போது பயிற்சி காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.