நெல்லையில் தூங்கி கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (40) விவசாய வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அய்யம்மாள் (35). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மாதவன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்றிரவு மது போதையில் மனைவி வீட்டுக்குச் சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு இரவு நேரம் என்பதால் அங்கேயே தூங்கியுள்ளார். ஆத்திரத்திலிருந்த மனைவி அய்யம்மாள் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். பின்னர் இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.