தமிழ்நாடு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராவிற்கு விபூதி அடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.
தென் திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த காசி விசுவநாதர் கோவிலில், மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, அங்கிருந்த இரும்பு பீரோவை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் மீது விபூதியை ஊதிவிட்டு ஹார்ட் டிஸ்க் முக்கிய பதிவுகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.