திண்டுக்கல் : அரசு மருத்துவமனை கழிவறையில் சிசு சடலம் - அதிர்ச்சி பின்னணி

அரசு மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.
குழந்தையை மீட்ட போலீசார்
குழந்தையை மீட்ட போலீசார்

அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு நாட்களே ஆன ஆண் குழந்தை கழுத்து, தலையில் காயத்துடன் இறந்து கிடந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இன்று அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்து, தலையில் காயத்துடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு யாருடையது எனக் கண்டறிவதற்காக டி.என்.ஏ பரிசோதனை செய்ய குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவமனை

அரசு மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ' குழந்தை யாருடையது குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com