ஓசூர் அடுத்த கெலமங்கலம் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறிய பிடிஓக்களை கண்டித்து யூனியன் சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அடுத்த கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் யூனியன் சேர்மன் கேசவமூத்தி தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் BDO குமரேசன் மற்றும் ஸ்கீம் BDO சாந்தலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், 8 மாதத்திற்கு பிறகு தற்போது தான் மன்றத்தின சாதாரண கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இதுவரை எத்தனை திட்டங்கள் வந்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என பிடிஓக்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, பிடிஓ சாந்தலட்சுமி மொபைல் பேசிக்கொண்டிருந்தார். இதற்கு யூனியன் சேர்மன், கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் கூறாமல் மொபைல் பேசிக்கொண்டிருக்கின்றனர் என கேட்டதற்கு பதில் கூறாமல் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.
அப்போது அங்கிருந்த மற்றொரு பிடிஓ குமரேசன் கவுன்சிலர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல், மொபைல் போனில் கவுன்சிலர்களையும் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களையும் வீடியோ எடுத்துக்கொண்டு பதில் கூறாமல் நைசாக கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.இதனால் கூட்டம் நடைபெறாமல் பாதியில் முடிந்தது.
அதிகாரிகள் வந்து பதில் கூறும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேறாமல் கவுன்சிலர்கள் மற்றும் யூனியன் சேர்மன் கேசவமூர்த்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் பிறகு சில கவுன்சிலர்களும், அதிகாரிகளும் வந்து சமரசம் செய்தனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் அளிக்கப்படுவதாக கூறி கலைந்து சென்றனர்.