சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற கன்னந்தேரி கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கிராம மக்கள் சார்பில் விழா குழுவினர் அறிவிக்கப்பட்டு திருவிழாவுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோயில் திருவிழாவையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி காவல்துறையினரிடம் நாடியுள்ளனர்.
ஆனால் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விழாக் குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர்.
அதன்படி, கன்னந்தேரி கோயில் திருவிழாவையொட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சி நேற்று அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிந்து ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ‘என்ன செய்வது?’ என தெரியாமல் விழாக்குழுவினர் கையை பிசைந்து வருகின்றனர்.