தென்காசி: பைக் மீது கார் மோதி விபத்து - தம்பதிக்கு நேர்ந்த சோகம்

தென்காசி: பைக் மீது கார் மோதி விபத்து - தம்பதிக்கு நேர்ந்த சோகம்
தென்காசி: பைக் மீது கார் மோதி விபத்து - தம்பதிக்கு நேர்ந்த சோகம்

பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியான நிலையில் அவர்களது ஒன்றரை வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை

நெல்லை மாவட்டம், மானூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்தில் கணவன் மனைவி பலியான நிலையில் படுகாயம் அடைந்த அவர்களது ஒன்றரை வயது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவரது மனைவி சுகன்யா. இவர்கள் மகிதா (3) மற்றும் ஒன்றரை வயது மகேஸ்வரி என்ற 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் கணவன், மனைவி இருவரும் நெல்லையை நோக்கி சங்கரன்கோவில் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் சுகன்யாவின் கையிலிருந்த குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டது. மேலும் கணவன், மனைவி இருவரும் காருக்கு அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கார் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கி நின்றது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விபத்து ஏற்பட்ட பகுதியில் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த கணவன், மனைவி மற்றும் சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தையும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆம்புலன்சில் செல்லும்போதே சுகன்யா உயிரிழந்தார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயில்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒன்றரை வயது குழந்தை மகேஸ்வரிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த அஜ்மத் என்பவர் மீது மானூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com