தென்காசி: வேட்டையாடப்பட்ட புள்ளிமான்கள் - குற்றவாளிகளை வளைத்தது எப்படி?

தென்காசி: வேட்டையாடப்பட்ட புள்ளிமான்கள் - குற்றவாளிகளை வளைத்தது எப்படி?
தென்காசி: வேட்டையாடப்பட்ட புள்ளிமான்கள் - குற்றவாளிகளை வளைத்தது எப்படி?

நடத்திய விசாரணையில் அவர்கள் மானை வேட்டையாட்டியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

தென்காசி வனப்பகுதிகளில் தொடரும் புள்ளி மான், புலி வேட்டை போன்ற விலங்குகளில் வேட்டைகளைத் தடுக்க முடியாமல் வனத்துறையினர் விழிபிதுங்கி நின்கின்றனர். 
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள், யானை, குரங்கு, மான், மிளா போன்ற எண்ணற்ற விலங்குகள் வாழ்கின்றன. குறிப்பாக கடையம் வனச்சரகத்தில் மான்கள் அதிகம். மான்களை வேட்டையாடும் கும்பலும் அதிகம். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 10 மான்கள் வேட்டையாடப்பட்டு இருக்கின்றன. பொதுவாக மான்கள் இரவு நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காகக் காட்டுப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வருவது வழக்கம். இதைத் தெரிந்து கொண்ட வேட்டைக்காரர்கள் நீர்நிலைகள் பக்கம் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருப்பார்கள். 
மான்கள் தண்ணீர் குடிக்க வரும்போது சுட்டுத் தள்ளி, அதை கூறு போட்டு விற்பனை செய்கிறார்கள். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட வனத்துறையினர் கடந்த 20ம் தேதி கடையம் வனச்சரகம் மத்தளம்பாறை ஃபீட்டில் இரவு ரோந்து சென்ற போது காட்டுப் பகுதியில் மான் ஒன்று வேட்டையாடப்பட்டு செத்துக் கிடந்தது. உடனடியாக மானை வேட்டையாடியவர்களைத் தேடியபோது காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேர்களைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மானை வேட்டையாட்டியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கணேசன், காசிமேஜர்புரம் செண்பகம், மின் நகர் பிரபு ராஜா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடரும் வேட்டையை தடுக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது வனத்துறை.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com