சேலம்: டெட்டனேட்டரை வெடிக்க வைத்து மீன் பிடிப்பு - இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சேலம்: டெட்டனேட்டரை வெடிக்க வைத்து மீன் பிடிப்பு - இளைஞருக்கு நேர்ந்த சோகம்
சேலம்: டெட்டனேட்டரை வெடிக்க வைத்து மீன் பிடிப்பு - இளைஞருக்கு நேர்ந்த சோகம்

மீன் பிடிப்பதற்காக டெட்டெனேட்டர் வெடி வைத்த முருகன் தலைமறைவாகிட்டார்.

டெட்டனேட்டர் வெடியை வெடிக்க வைத்து மீன் பிடிக்க முயற்சி செய்தபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் என்ற இளைஞர் உடல் சிதறி பலியானார். 
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ளது குட்டி கேரளா என்றழைக்கப்டும் பூலாம்பட்டி. அந்தக் கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது நெரிஞ்சிப்பேட்டை கதவணை. ஊர் மக்களுக்குப் பயன்படுத்துவதற்காக காவிரி நீரைத்  தடுத்து இந்த கதவனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கமான ஒன்று. நேற்று மாலை பூலம்பாட்டி பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற மீனவர் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். டெட்டனேட்டர் வெடியை வெடிக்க வைத்து மீன் பிடித்துள்ளார். அப்போது அங்குக் குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் என்ற இளைஞர் உடல் சிதறி பலியாகி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அங்குள்ள மீனவர்கள் நம்மிடம் கூறுகையில்,  ’’வெடிப் பொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. மூன்று மீனவர்கள் இந்த விதிமுறைகளை மீறி மீன் பிடித்து வந்தனர். அதில் ஒருவர் முருகன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மோகன்குமார் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குளிப்பதற்காக இங்கே வந்துள்ளார். கூடவே அவரது நண்பர் பூபதிரும் மோகன் குமாருடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது  தண்ணீகுள் மீன் பிடிக்க வைத்திருந்த டெட்டனேட்டர் வெடியில் மோகன்குமார் மாட்டிக் கொண்டுள்ளார்’’எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாரிடம் பேசினோம். ’மீன் பிடிப்பதற்காக டெட்டெனேட்டர் வெடி வைத்த முருகன் தலைமறைவாகிட்டார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே சம்பவம் எப்படி நடந்தது என்கிற விவரங்கள் வெளியாகும்' என கூறினர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com