சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும். சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான புதுவயல், அரியகுடி, கண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாரச் சந்தைகள் வெவ்வேறு கிழமைகளில் நடைபெறும். இங்கு காய்கறி, இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களைக் குறிவைத்து இருசக்கர வாகனங்களை கீரமங்கலத்தைச் சேர்ந்த பிரபல திருடன் கண்ணன் தலைமையிலான ஐந்து பேர் கும்பல் திருடியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.