'சாம்பாரில் அட்டைப் பூச்சி' - அதிர்ச்சி கொடுத்த புதுவை ஜிப்மர் மருத்துவமனை கேன்டீன்

'சாம்பாரில் அட்டைப் பூச்சி' - அதிர்ச்சி கொடுத்த புதுவை ஜிப்மர் மருத்துவமனை கேன்டீன்
'சாம்பாரில் அட்டைப் பூச்சி' - அதிர்ச்சி கொடுத்த புதுவை ஜிப்மர் மருத்துவமனை கேன்டீன்

கேண்டீன் உணவை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரியில், மத்திய அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனை கேன்டீன் சாம்பாரில் மிதந்த அட்டைபூச்சியால் அதிர்ச்சி ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்யது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள், உறவினர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் நிர்வாக பிரிவு கட்டிடம் பின்புறம் நிர்வாக கேன்டீன் அமைந்துள்ளது. இந்தக் கேண்டினில் குறைந்த விலையில் உணவு தருவதால் பலரும், இங்கு சாப்பிடுவது வழக்கம். இன்று ஜிப்மரில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் அந்த கேண்டில் அமர்ந்து இட்லி, பொங்கல் ஆகியவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஊழியர் அங்கு சாப்பிடும் போது சாம்பாரில் அட்டை பூச்சி மிதந்ததால், அதிர்ச்சி அடைந்தார். ஊழியர் கேண்டின் நிர்வாகியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குக் கேண்டின் நிர்வாகிகள் பொறுப்பில்லாமல் சரியான பதில் தராததால், ஊழியர் சாப்பாட்டை எடுத்து ஓரம் வைத்துவிட்டு சாப்பிடாமல் எழுந்து சென்றார்.  இதை அங்கிருந்த ஒரு ஊழியர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனை கேண்டீன் உணவை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே உணவு தரமில்லாதது தொடர்பாக இந்தக் கேண்டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com