தூத்துக்குடி: பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம் - பொதுத்தேர்வின்போது அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி: பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம் - பொதுத்தேர்வின்போது அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி: பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம் - பொதுத்தேர்வின்போது அதிர்ச்சி சம்பவம்

காயம் அடைந்த மாணவிகளை தேர்வு எழுதிய பிறகு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத வந்த மாணவிகள் அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்ற போது அதன் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் வர்ஷினி இசக்கி பிரியா, விஜயா ப்ரியா, மாரியம்மாள், மகரஜோதி ஆகிய மாணவிகள் காயம் அடைந்தனர்.
 காயம் அடைந்த மாணவிகளை தேர்வு எழுதிய பிறகு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால், காயத்துடன் மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த பிறகு எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துள்ளனர். இது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com