வாணியம்பாடி: இளம்பெண் தற்கொலை- கணவரின் உறவினர்கள் மீது தாக்குதல்

வாணியம்பாடி: இளம்பெண் தற்கொலை- கணவரின் உறவினர்கள் மீது தாக்குதல்
வாணியம்பாடி: இளம்பெண்  தற்கொலை- கணவரின் உறவினர்கள் மீது  தாக்குதல்

வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வாணியம்பாடி அருகே திருமணம் ஆன நான்கு ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் கணவரின் உறவினர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அடுத்தத் தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அருண்(30).இவருக்கும் ஆம்பூர் அடுத்தக் கரும்பூர் குப்பராஜாபாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகள் ஹேமாவதிக்கும்(26)  என்பவருக்கும்  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேமாவதி இன்று தேவஸ்தானம் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் சடலமாக இருந்துள்ளார்.

வெளியே சென்ற கணவர் வீட்டார் வீட்டிற்குத் திரும்பி வந்த போது, ஹேமாவதி சடலமாகத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெண் வீட்டாருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, மருத்துவமனையில் வளாகத்தில் கணவனின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இதனைதொடர்ந்து, இளம்பெண்ணின் தந்தை பழனி அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com