சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,. புது சந்தைப்பேட்டை பகுதியில் செல்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஜிடிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் அருகருகே இரண்டு ஏர்செல் செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த டவர் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் பயன்பாடின்றி விடப்பட்டது. மேலும், கொரோனா காலம் என்பதால் செல்போன் டவர் அமைத்த ஜிடிஎல் நிறுவன ஊழியர்கள் யாரும் செல்போன் டவரை காண வரவில்லை என கூறப்படுகிறது.