தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்குச் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு 30 படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து வேளாங்கண்ணிக்குத் தனியார் பேருந்து ஒன்று 51 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அதிகாலை 5 மணி அளவில் ஒக்கநாடு கீழையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் 8 வயது சிறுவன் மற்றும் மூதாட்டி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்தால் ஒரத்தநாடு-மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது