‘நானும் போலீஸ்காரன்தான் ஒன்னும் செய்ய முடியாது’ - புதுச்சேரி போலீசை மிரட்டிய தமிழக போலீஸ்காரர்

‘நானும் போலீஸ்காரன்தான் ஒன்னும் செய்ய முடியாது’ - புதுச்சேரி போலீசை மிரட்டிய தமிழக போலீஸ்காரர்
‘நானும் போலீஸ்காரன்தான் ஒன்னும் செய்ய முடியாது’ - புதுச்சேரி போலீசை மிரட்டிய தமிழக போலீஸ்காரர்

புதுச்சேரி போலீசை மிரட்டிய தமிழக போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது

புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு பிரீமியர் ரமேஷ் மற்றும் போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி எல்லையான கன்னிக்கோயில் அருகே நான்கு முனை சந்திப்பு பகுதியில் மது போதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். 

இதைப் பார்த்த போலீஸ் ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் அந்த நபருக்கு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து குடிக்கச் செய்தனர். தண்ணீரை குடித்து முடித்ததும் அந்த நபர் திடீரென போலீசாரை பார்த்து ஆபாசமாக திட்டியுள்ளார். 

அந்த நபர் மது போதையில் இருப்பதை அறிந்த போலீசார் அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் தொடர்ச்சியாக வருவோர், போவோர் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

அப்போது அவர். ‘நானும் போலீஸ்காரன்தான். ஒன்னும் செய்ய முடியாது’ என, கூறியுள்ளார். மேலும் போலீசாரை ஆபாசமாக திட்டியபடி அவர்களை தாக்கி காவல் நிலையத்திற்கு உள்ளேயே கட்டிப் புரண்டு சண்டையிட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் ‘என் மீது தடா, புடா எதில் வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன்’ என, பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர் திடீரென காவல் நிலையத்தில் இருந்து எழுந்து வெளியே ஓடி வந்து சாலைக்கு வந்துள்ளார். உடனடியாக அவரை போலீசார் மடக்கிப்பிடித்து மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

அதில், கடலூர் அடுத்துள்ள கீழ் பூவானிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் (38) என்பதும், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதற்கிடையே போதை காவலர் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு வந்துள்ளனர். 

இதைப் பார்த்ததும் பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக திட்டிய ஜனார்த்தனன் திடீரென அவர்களையும் தாக்கியதோடு, மிரட்டவும் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். புதுச்சேரி போலீசாரை திட்டி தமிழக போலீஸ்காரர் காவல் நிலையத்தில் அட்டகாசம் செய்தது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com