புழல் சிறை: ஒரே வாரத்தில் சிக்கிய 2 போலி வக்கீல்கள் - என்ன நடந்தது?

புழல் சிறை: ஒரே வாரத்தில் சிக்கிய 2 போலி வக்கீல்கள் - என்ன நடந்தது?
புழல் சிறை: ஒரே வாரத்தில் சிக்கிய 2 போலி வக்கீல்கள் - என்ன நடந்தது?

சென்னை புழல் சிறைக்குள் நுழைய முயன்ற போலி வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னை புழல் சிறைக்குள் நுழைய முயன்றதாக போலி வக்கீல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட புகாரில் ரவி (57) என்பவரை கடந்த 9 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவர், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று புழல் 2 ஆவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி் ரவியை சந்திப்பதற்காக வழக்கறிஞர் ஒருவர் வந்துள்ளார். அந்த வழக்கறிஞரின் அடையாள அட்டையை சிறை பெண்காவலர் இன்பா வாங்கி பரிசோதித்தார். 

வழக்கறிஞர் அடையாள அட்டையின் எம்.எஸ் எண்ணை ஆய்வு செய்தபோது வேறொரு வழக்கறிஞர் பெயர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் சிறைக்காவலர் அந்த போலி வழக்கறிஞரை பிடித்து புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

புழல் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஆதம்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்த ஸ்டாலின் (38) என்பது தெரியவந்தது. வேலை இல்லாததால் போலி வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரித்து வைத்து கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலி வழக்கறிஞர் ஸ்டாலின் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே கடந்த கடந்த 17 ஆம் தேதி சதீஷ்குமார் என்பவர் தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக் கொண்டு புழல் சிறைக்குள் நுழைய முயன்றார். பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தியபோது அவர் ‘போலி வழக்கறிஞர்’ என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு போலி வழக்கறிஞர் புழல் சிறைக்குள் நுழைய முயன்று கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com