இந்நிலையில் 'அயன்' பட பாணியில் டி.நகர் உமையம்மாள் தெருவில் பாங்கான குடும்பம் போல நடித்து, பேக் கிரவுண்டில், ‘மிட் நைட்’ஷோ நடத்தி வந்த கும்பலை ரவுண்ட் அப் செய்துள்ளது காவல்துறை. இந்த விவகாரம் தொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு டீமைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் பேசினோம். அவர் கூறும்போது, ‘ஆந்திர மாநிலத்தைச் பூர்வீகமாகக் கொண்டவர் பாலராம கிருஷ்ணா. பெயர் மங்களகரமாக இருந்தாலும், அவரது வாழ்க்கை மங்களமாக இல்லை. இந்நிலையில் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர், பலவிதமான வேலைகளை செய்துவந்துள்ளார். அப்போது அவருக்கு அறிமுகமானவர்தான் ஆட்டோ டிரைவரான முருகன். அவர் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுவார். இரவு நேரத்தில் கஸ்டமர்களுக்காக பலான ஃபிகர்களை ஓட்டிக்கொண்டு வருவது அவருடைய பார்ட் டைம் ஜாப். இந்தத் தொழிலை பாலராம கிருஷ்ணாவிற்கும் கற்றுக்கொடுத்துள்ளார் முருகன்.