அந்த ஊரில் அதிகம் படித்தவர் என கூறப்படும் விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. சிறுமிகளை இணையதளங்களில் பதிவேற்றும் செய்வது, பதிவிறக்கம் செய்வதும் அந்த இணையதளங்களில் பார்ப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிராமத்தில் இயற்கை விவசாயம் மீது ஆர்வம், சமுக நலனில் அக்கறை என தன்னை ஒரு ஆர்வலராக காட்டி வந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிலே ராமன் வெளியில் கிருஷ்ணனாக வலம் வந்துள்ளார்.