நெல்லை: கோவில் நிலம் ஆக்ரமிப்பு - இருதரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு

நெல்லை: கோவில் நிலம் ஆக்ரமிப்பு - இருதரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு
நெல்லை: கோவில் நிலம் ஆக்ரமிப்பு - இருதரப்பு மோதலால் போலீஸ் குவிப்பு

முள்வேலி அமைத்து வாகனங்களை அப்பகுதியில் நிறுத்திவைத்துள்ளனர்

திருநெல்வேலியில் கோவில்நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மேலப்பாளையம் அடுத்துள்ள குறிச்சி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முப்புடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த காலியிடத்தை கோவிலின் விழாக்களின் போது பயன்படுத்தவும் சப்பரம் உள்ளிட்டவைகள் நிறுத்தி வைக்கவும் உபயோகப்படுத்தி வந்தனர். இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அபகரிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பிரிவினர் முள்வேலி அமைத்து வாகனங்களை அப்பகுதியில் நிறுத்திவைத்துள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு தரப்பினர் முன்வேலிகள் மற்றும் எல்லைக் கற்களை ஆவேசத்துடன் உடைத்தெறிந்தனர். இதனால், இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. 

இதனையடுத்து, மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில்  போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com