ஸ்ரீரங்கத்தில் மது போதையில் ஓட்டுநர் கார் ஏற்றியதில் மூன்று யாசகர்கள் உயிரிழப்பு

ஸ்ரீரங்கத்தில் மது போதையில் ஓட்டுநர் கார் ஏற்றியதில் மூன்று யாசகர்கள் உயிரிழப்பு
ஸ்ரீரங்கத்தில் மது போதையில் ஓட்டுநர் கார் ஏற்றியதில் மூன்று யாசகர்கள் உயிரிழப்பு

காரை ஓட்டி வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து யாசகர்கள் மீது ஏறியது என்பது தெரிய வந்தது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் யாசகர்கள் மீது மது போதையில் கார் ஏற்றியதில் மூன்று யாசகர்கள் உயிரிழந்தனர். 
திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் அருகே சாலை ஓரத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்ட யாசகர்கள் உறங்குவார்கள். நேற்றும் வழக்கம்போல் யாசகர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவர்கள் பலனின்றி உயிரிழந்தனர். யாசகர்கள் மீது காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றவர்களை அப்பகுதி மக்கள் விரட்டி சென்று பிடித்தனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன்(23) மற்றும் அஸ்வந்த்(21) என்பதும் மது போதையில் இருந்து அவர்கள் அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து யாசகர்கள் மீது ஏறியது என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த யாசகர்கள் யார் அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com