வேறொரு பெண் கேட்குதா உனக்கு? ஈரோட்டில் இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கள்ளக்காதலி

வேறொரு பெண் கேட்குதா உனக்கு? ஈரோட்டில் இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கள்ளக்காதலி
வேறொரு பெண் கேட்குதா உனக்கு? ஈரோட்டில் இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கள்ளக்காதலி

கொதிக்க வைத்திருந்த பாமாயில் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது ஊற்றியுள்ளார்.

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கள்ளக்காதலன் மீது இளம்பெண் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் 27 வயதான கார்த்திக். 27 வயதான இவரது உறவுக்கார பெண் மீனா தேவி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது குழந்தையுடன் மீனா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக்கிற்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கார்த்திக்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இது கள்ளக்காதலி மீனாவுக்கு தெரியவர ஆத்திரம் அடைந்தார். 
நேற்று மதியம் கார்திக் தனது கள்ளக்காதலி மீனாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கிடம் மீனா திருமணம் குறித்து கேட்டுள்ளார். இதனால் மீனாவுக்கும் கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மீனா, அடுப்பில் கொதிக்க வைத்திருந்த பாமாயில் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது ஊற்றியுள்ளார். இதில் கார்த்திக்கின் முகம் மற்றும் தோள்பட்டை வெந்தது. எரிச்சல் தாங்க முடியாமல் கார்த்திக் அலறி துடித்தார். உடனே மீனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 
மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து  பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எண்ணெய்யை ஊற்றிய மீனாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com