போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி; துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி; துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்
போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி; துப்பாக்கியால் சுட்டு பிடித்த  போலீஸ்

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lதூத்துக்குடி அருகே போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ரவுடியை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது 
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில்  தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளான ஜெயபிரகாசை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி  அருகே உள்ள தட்டப்பாறை காட்டுப் பகுதியில் பதுங்கி  இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் ஜெயபிரகாஷை கைது செய்யதனர்.அப்போது போலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் ஜெயபிரகாஷ்  காலில் சுட்டுள்ளனர்.காயம் ஏற்பட்ட அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இச்சம்பவத்தின் போது உதவி காவல்  ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com