"இறந்தும் வாழும்" மனிதர்களின் பட்டியலில் கல்லூரி மாணவர் இடம் பிடித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டை அருகில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் சின்னதுரை பாப்பாத்தி இவர்களுடைய மகன் அமரேஷ் (19 ) இவர் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு பயின்று வந்தார் .இவர் தனியார் பேருந்தில் திண்டுக்கல்லிலிருந்து தனது சொந்த ஊரான பில்லமநாயக்கன்பட்டிக்கு பயணம் செய்துள்ளார்.
பில்லமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது படிக்கட்டிலிருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.அங்கு இளைஞருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்த வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இறந்த கல்லூரி மாணவன் அமரேசின் கண்களை அவருடைய உறவினர்கள் தனமாக வழங்கியுள்ளனர்.இதனால் "இறந்தும் வாழும்" மனிதர்களின் பட்டியலில் கல்லூரி மாணவர் அமரேஷ் இடம் பிடித்துள்ளார்.இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.