மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்

நாள் ஒன்றுக்கு 2 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 25ஆக அதிகரித்துள்ளது.

சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது; சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது. அப்போது பேசிய அவர், ’’H3N2 வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 2 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 25ஆக அதிகரித்துள்ளது’’என அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.12 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 65 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 9 ஆயிரத்து 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com