இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கண்மாய்கரை மற்றும் கருவேல மரங்கள் நிறைந்த இடத்தில் மயில்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, நேற்று ஆய்வு மேற்கொண்ட போது 18 மயில்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 22 மயில்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டன. மேலும் வனத்துறையினர் மயில்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பயிர்களை பாதுகாக்க மருந்து வைக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என கூறினர்.