பொதுவாக ஈஷா மீது வெளியிலிருந்துதான் புகார் கிளம்பும். ஆனால், நேற்று ஈஷாவுக்கு உள்ளிருந்தே ஒரு புகார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. அது ‘ஆள் காணவில்லை’எனும் புகார். அதாவது தென்காசி மாவட்டம், குரும்பலாசேரியை சேர்ந்தவர் கணேசன். 45 வயதான இவர் கடந்த 2007ம் ஆண்டில் ஈஷாவில் தன்னார்வலராக இணைந்துள்ளார். பின் அதன் தீவிர பக்தரானவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்மச்சரியம் பெற்றார். தனது பெயரை ‘பவதுத்தா’என்று மாற்றிக் கொண்டுள்ளார். ஈஷாவுக்கு மேற்புறம் இருக்கும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டு தோறும் இவர் ஏறிச்சென்று சுயம்பு லிங்கத்தை வணங்கிவிட்டு வருவது வழக்கமாம்.