தமிழ்நாடு மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஏராளமானோர் அடிமையாகி பெரும் பணத்தை இழந்துள்ளனர். படிக்காதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி உயர் வருவாய் வகுப்பினரும் இந்த சூதாட்டத்துக்கு தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர். இதற்குத் தடை விதிக்கக் கோரி, சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.