திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு விவகாரம்; இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு விவகாரம்; இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!
 திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு விவகாரம்; இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே நெருங்கிய 
 உறவினரான இம்ரான் பாஷா என்பவருடன் காரில் சென்றுகொண்டிருந்த போது மஸ்தானுக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும்
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தந்தை மஸ்தானின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் ஹரீஷ் ஷானவாஸ் அளித்த புகாரில், விசாரணை நடத்திய போலீசார், மஸ்தானின் தம்பி கௌஸ் ஆஷாம்  பாஷா மற்றும்  ஓட்டுநர் இம்ரான் பாஷா உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி  காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கௌஸ் ஆஷாம் பாஷாவின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (மார்ச் 01) தள்ளுபடி செய்தது, ஓட்டுநர் இம்ரான் பாஷா ஜாமீன் கோரிய மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில் மஸ்தான் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓட்டுநர் இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com