தமிழ்நாடு
முதியவரை மிரட்டி பணம் பறிப்பு: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது.!
முதியவரை மிரட்டி பணம் பறிப்பு: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது.!
கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருக்கும் முதியவரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கோயில் இடத்தில் வாடகைக்கு குடியிருக்கும் முதியவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில், இந்து மக்கள் கட்சி மாநகர துணைத்தலைவர் மகேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மகேஷிடம் போலீசார் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே மகேஷ் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.