பொங்கல் சிறப்பு ரயில் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்

பொங்கல் சிறப்பு ரயில் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்
பொங்கல் சிறப்பு ரயில்  : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில்  விற்று தீர்ந்த டிக்கெட்

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், 5 சிறப்பு ரயில்களில் முன்பதிவு நிறைவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து ஜன. 12-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். 

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜன.13-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து ஜன.13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06041) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஜன.16-ம் தேதி மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில்(06042) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதுதவிர, கொச்சுவேலி-தாம்பரம்(06044-06043), எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல் (06046-06045), தாம்பரம்-திருநெல்வேலி (06057-06058) ஆகிய 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com