10,11மற்றும் 12 ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை
பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வில் முதல் 10 இடங்களில் முன்னேற்றும் நோக்கத்தில் “சிகரம் தொடு 2022-2023” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க,
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்யும் வகையில், மேற்கண்ட வகுப்பு மாணவ-மாணவியருக்கு மட்டும் பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரமும், மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.