மத்திய மின்சார அமைச்சருடன், தமிழக மின்சார அமைச்சர் சந்திப்பு
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே,சிங்கை, தமிழக மின்சார அமைச்சர் சந்தித்து பேசினார்.
டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை செந்தில்பாலாஜி அளித்தார்.
மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.