6-12க்கு தினசரி வகுப்பு துவங்குவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

6-12க்கு தினசரி வகுப்பு துவங்குவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!
6-12க்கு தினசரி வகுப்பு துவங்குவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

6-12க்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

6-12க்கு தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 - 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று(டிச.15)  தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து 6 முதல் 12க்கு தினசரி வகுப்பு நடத்துவதில் மாற்றம்  ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்குள் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தினசரி வகுப்பு நடத்துவது பற்றி டிச. 25 ல்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வுகள் நடக்கும். என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com