ஓடும் ரயிலில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல்..!

ஓடும் ரயிலில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல்..!
ஓடும் ரயிலில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல்..!

ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி நகைகள், ரூ.32 லட்சம் பறிமுதல்

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் சேலம் நகை வியாபாரிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி நகைகள், ரூ.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று நள்ளிரவு (ஜூலை 08) கேரள மாநிலம் கொல்லம் நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் இன்று அதிகாலை காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில், சென்னை கோட்ட ரயில்வே குற்ற புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு பெட்டியில் பெரிய பைகளுடன் பயணம் செய்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இவர்கள் சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (42), நித்யானந்தம் (35), பிரகாஷ் (28), சுரேஷ் (35) என்பதும், இவர்கள் அனைவரும் சேலத்தில் சொந்தமாக வெள்ளி நகைப்பட்டறை வைத்திருப்பதும் தெரியவந்தது. 

வெள்ளிக் கட்டிகளை வாங்கி கால் கொலுசு, காப்பு, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்றி விற்றுவருவதும் தெரியவந்தது. விசாகப்பட்டினத்தில் உள்ள நகை வியாபாரிகளுக்கு வெள்ளி ஆபரணங்களை கொடுத்துவிட்டு இவர்கள் ஊர் திரும்பியது தெரியவந்தது. 

அவர்கள் வைத்திருந்த பெரிய பையை சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், ஆபரணங்கள் மற்றும் ரூ.32 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் 4 பேரையும் பிடித்து காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com