சென்னையில் நடமாடும் மளிகை கடைகளுக்கு 2,197 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தகவல்!

சென்னையில் நடமாடும் மளிகை கடைகளுக்கு 2,197 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தகவல்!
சென்னையில் நடமாடும் மளிகை கடைகளுக்கு 2,197 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தகவல்!

வாகனங்கள் மூலம் நடமாடும் கடைகளை தொடங்க விரும்புவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் காய்கறி-மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. 
 பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி பெற்ற நடமாடும் மளிகை கடைகள் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது.
இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரத்து 500 நடமாடும் மளிகை கடைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 2 ஆயிரத்து 197 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மாநகராட்சியில் பதிவு செய்தவர்கள் மூலம் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் நடமாடும் கடைகளை தொடங்க விரும்புவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com