மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..
மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..

பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவியர் மாணவர்களை விட 5.39 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றனர். 
இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில்  விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்  தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம்  தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com