2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் - என்ன காரணம்?
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வெட்டுகாட்டுபுதூரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வெட்டுகாட்டுபுதூரை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு 6 வயதிலும், 2 வயதிலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும், அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதால், சசிகலா கோபித்துக் கொண்டு, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
சசிகலாவை காணவில்லை என்று அவரது கணவரும், உறவினர்களும் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர், இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து சசிகலா தனது 2 குழந்தைகடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், விவசாய கிணற்றில் குதித்து சசிகலா தனது 2 குழந்தைகடன் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தினர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.