கொரோனா பரிசோதனைக்கு பயந்து குறுக்குவழியில் பயணம் - தீப்பிடித்து எரிந்த லாரி

கொரோனா பரிசோதனைக்கு பயந்து குறுக்குவழியில் பயணம் - தீப்பிடித்து எரிந்த லாரி

கள்ளகுறிச்சியிலிருந்து மதுரைக்கு பஞ்சுலோடு ஏற்றி வந்த லாரி ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

கள்ளகுறிச்சியிலிருந்து மதுரைக்கு பஞ்சுலோடு ஏற்றி வந்த லாரி ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் நேற்று கள்ளகுறிச்சியிலிருந்து  மதுரைக்கு லாரியில் பஞ்சிலோடை ஏற்றிகொண்டு வந்துள்ளார். அப்போது நாமக்கல் மாவட்டம் திம்மநாய்க்கன்பட்டி வழியாக வந்தால் தமக்கு கொரோணா பரிசோதனை செய்து இரண்டு நாட்கள் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்று நினைத்த ஓட்டுநர், வாழப்பாடியில் இருந்து மங்களபுரம் வழியாக கரூர் நோக்கி பயணித்துள்ளார்.  மங்களபுரம் அருகே லாரியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று லாரியில் இருந்த பஞ்சுகள் தீப்பற்றி எரியதொடங்கி உள்ளன. இதில் லாரி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com